search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலத்தில் கொள்ளை"

    சேலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மகும்பல் பெண்ணிடம் இருந்து 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம், ஓமலூர் செல்லப்பிள்ளை குட்டை, புதூர் நல்ல கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 67). இவரது மனைவி சரோஜா(53). இந்த தம்பதியினர் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி எதிரே பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.

    நேற்று மதியம் அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து கடையில் இருந்த ஆறுமுகத்திடம் குடிக்க தண்ணீர் கேட்டார்.

    அவர், தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது சரோஜா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை அந்த மர்ம நபர் பறித்து விட்டு ஓட முயன்றார். சத்தம் கேட்டு ஓடி வந்த ஆறுமுகம் அவர்களை பிடிக்க முயன்றார். இதில் ஒருவன் சிக்கினான். அவன் ஆறுமுகத்தை தாக்கி கீழே தள்ளி விட்டு, தப்பி ஓடி விட்டார்.

    இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×